1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (19:29 IST)

தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு அனுமதியில்லை - அரசு அதிரடி உத்தரவு

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதையத்து கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது.  இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களை அனுமதிக்க முடியாது என கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும்,   மானவர்களின் பாதுகாப்பு பிரச்சனை என்பதை ஆசிரியர்கள் உணரவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.