1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:25 IST)

ஆஃப்கானிஸ்தானில் ஆசிரியர்கள் கோரிக்கை

சமீபத்தில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றினர். எனவே தற்போது தலீபான்கள் அரசு அமைந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் நூற்றுக்கணக்கான அசிரியர்கள் ஒன்றுகூடி, தலீபான்கள் தங்களுக்கு சுமார்  4 மாதங்களாகச் சம்பளம் கொடுக்கவில்லை எனவும், இதனால் தங்களின் குழந்தைகளுக்கு உணவு வழங்கமுடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் உடனடியாகச் சம்பளம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.