1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Tragedy During Vinayagar Idol Immersion: 9 Drowned, 12 Missing

விநாயகர் சிலை கரைப்பின்போது சோகம்: 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு, 12 பேர் மாயம்.. பக்தர்கள் அதிர்ச்சி..!

விநாயகர் சதுர்த்தி
மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக நிறைவுற்றது. இதனையொட்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த சிலைகளை கரைக்கும் பணியின்போது, நிகழ்ந்த துயர சம்பவத்தில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் நான்கு பேரின் உடல்கள் இதுவரை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
 
தானே, புனே, நாசிக், ஜல்கான், வாஷிம், பால்கர், அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோகமான நிகழ்வுகள் நடந்துள்ளன. நீரில் மூழ்கி மாயமான 12 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிலைகளை கரைக்க வந்திருந்த பக்தர்கள் மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விபத்து, பண்டிகைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தடுக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஹமாஸ்க்கு இதுதான் கடைசி எச்சரிக்கை! இனி பேசிட்டு இருக்க மாட்டேன்! - ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!