தொடர்புடைய செய்திகள்
- குஜராத்தில் முறிந்து விழுந்த ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ
- ஆழ்கடலில் ஐந்து நாட்களாக கிடந்த மீனவர் – குலைநடுங்க வைக்கும் சம்பவம்
- ஹோட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்.. கேரளாவில் புதுமை
- மாப்பிள்ளையை கடத்திய பாஜக எம்.எல்.ஏ – உ.பியில் பரபரப்பு
- ”ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது”… ப.சிதம்பரம் கொந்தளிப்பு
இன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்
இன்று நள்ளிரவில் நடக்க இருக்கும் சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சூரியனுக்கும், நிலவுக்கு இடையே பூமி நேர்கோட்டில் வரும்போது சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த முறை நிகழும் சந்திரகிரகணத்தை நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் வெறும் கண்களால் காண முடியும். இந்த சந்திர கிரகணம் பகுதியளவு சந்திர கிரகணம் (Partial Lunar Eclipse) எனப்படுகிறது. அதாவது பூமியின் நிழல் சந்திரனை முழுவதும் மறைக்காமல் குறிப்பிட்ட அளவு மட்டுமே மறைக்கும். நள்ளிரவு 1.30 மணியளவில் கிரகணம் தொடங்கும். அதிகாலை 4.30 வரை சந்திர கிரகணம் நடைபெறும்.
இந்த சந்திர கிரகணத்தை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் உள்ள பெருவாரியான மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து காணமுடியும். முழுமையான சந்திர கிரகணம் 2021ல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
