தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம்! – டெல்லி அரசு அறிவிப்பு!
- ஒரே நாளில் 7.51 லட்சம் பேருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அமெரிக்கா!
- 30 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்
- ''இரவின் நிழலில் ''பிறந்த நாள் கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான் !
இந்தியாவில் 1.17 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு! – அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 1 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,17,100 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,52,26,386 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,43,71,845 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,71,363 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
