வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (07:55 IST)

திருப்பதி எம்பிக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது தெரிந்ததே. இந்தியாவில் இதுவரை மொத்தம் கொரோனா வைரஸால் 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திருப்பதி எம்பிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலம் திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
ஏற்கனவே திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு பொருளற்று ஏற்பட்டதாம் அது 402 பேர் குணமடைந்து மீண்டும் பணியில் திரும்பியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது திருப்பதி எம்பிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது