சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2022 (21:54 IST)

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரிக்கு சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

jail
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி என்பவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து ஆந்திர மாநில ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்கள் மூன்று பேரை பணி நிரந்தரம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நீதிமன்ற ஆணையை அமல்படுத்தவில்லை என ஊழியர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது
 
இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டிக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து ஆந்திர மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva