1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. the young died after using viagara in hariyana

மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி!.. பாலியல் மாத்திரை போட்ட வாலிபர் மரணம்!...

hariyana
பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரையான வயாகரா கண்டுபிடிக்கப்பட்ட போது பலரிடமும் அது வரவேற்பை பெற்றது. ஏனெனில் 50 வயதுக்கு மேற்பட்ட பலரும் வயகரா மாத்திரையை பயன்படுத்த துவங்கினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் முதியவர்கள் மட்டுமில்லாமல் இளைஞர்களும் கூட பாலியல் மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதற்கு காரணம் தற்போதைய இளைஞர்களின் உடலில் ஆரோக்கியம் இல்லாமல் போனதே காரணம்.

இந்நிலையில்தான், அளவுக்கு அதிகமாக பாலியல் மாத்திரையை பயன்படுத்திய ஹரியானாவை சேர்ந்த வாலிபர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரோகித் லால் என்கிற 29 வாலிபருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்த ரோஹித் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அங்கே அழைத்திருக்கிறார். அந்த பெண் செல்வதற்கு முன்பு அவர் பாலியல் மாத்திரையை உட்கொண்டதாக தெரிகிறது..

அந்த பெண் அங்கே வந்து நீண்ட நேரம் கதவைத் தட்டியும் ரோஹித் கதவை திறக்கவில்லை. எனவே, அந்த பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரோகித் மயங்கி கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பாலியல் மாத்திரை ஓவர் டோஸ் ஆனதே அவரின் மரணத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் 5G FWA சேவை: ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் ஜியோ அதிரடி வளர்ச்சி!