1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (00:00 IST)

தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்

நாடு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் எனப்படும் முன்னணு முறையை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள சுமார் 80% வாகன ஓட்டிகள் மட்டுமே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து நாளை ( பிப்-15)க்கு பிறகு விலக்கு அளிக்கப்படாது என மத்திய அரசு கூறியுள்ளது.

எனவே தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா ஊரடங்கு நடைமுறை மற்றும் இந்த மின்னணு முறைய்ல் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் இருக்கையில் எதற்காக இம்முறை அமல்படுத்தப்படவுள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.