தொடர்புடைய செய்திகள்
- போலீஸ் கன்னத்தில் அரைந்த பெண்…வைரலாகும் வீடியோ
- மாஸ்க் போடலையா? இவன கொரோனா வார்டுல போடுங்க! – மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!
- கொரோனா பேசண்ட் அவரு.. பிடிங்க அவரை! – பட்டபகலில் நடந்த சேஸிங்!
- பிரதமர் மோடி பத்தி ஹார்வார்டு யுனிவர்சிட்டியில பாடம் எடுப்பாங்க! – ராகுல் காந்தி ட்வீட்!
- தாஜ்மஹால் இன்று திறக்கப்படாது! – முடிவை மாற்றிய அரசு!
குடித்து விட்டு சலம்பல் செய்த ஆசாமி; பொக்லைனால் மோதிய டிரைவர்! வீடியோ வைரலானதால் நடவடிக்கை!
தெலுங்கானாவில் மது அருந்திய ஆசாமி ஒருவரை டிரைவர் ஒருவர் பொக்லைன் எந்திரத்தால் மோதி தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் முலுகு பகுதியில் ஒருவர் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு மது அருந்தி விட்டு வந்த நபர் ஒருவருக்கும் பொக்லைன் டிரைவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பணி செய்யும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு இடையூறு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் பொக்லைனால் தோண்டும் முன்பகுதியை கொண்டு போதை ஆசாமியை இடித்து தள்ளியுள்ளார்.
இந்த சம்பவத்தை படம் பிடித்த சிலர் சமூக வலைதளங்களில் அதை பகிரவும், இதுகுறித்து தாக்க்ய டிரைவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் ஆசாமி மது அருந்தி விட்டு இடையூறு செய்தததாக டிரைவர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
