திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 5 நவம்பர் 2025 (08:43 IST)

SIR அச்சம் காரணம்.. மேற்குவங்கத்தில் ஒரே வாரத்தில் 7 பேர் தற்கொலை.. என்ன நடக்குது?

SIR அச்சம் காரணம்.. மேற்குவங்கத்தில் ஒரே வாரத்தில் 7 பேர் தற்கொலை.. என்ன நடக்குது?
மேற்கு வங்கத்தின் ஹவுராவில், ஜாகிர் மால் என்ற 30 வயது இளைஞர், தனது அடையாள ஆவணத்தில் ஏற்பட்ட எழுத்து பிழையை சரிசெய்ய முடியாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த பணியின்போது (SIR) குடியுரிமைக்கு சிக்கல் வருமோ என அவர் அஞ்சியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
 
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, SIR அச்சம் காரணமாக ஒரு வாரத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 
SIR தொடர்பான மன அழுத்தத்தால் ஹசீனா பேகம் என்ற மூதாட்டியும் உயிரிழந்ததாக TMC குற்றம் சாட்டியது. "SIR பட்டியலில் இல்லாதவர்கள் வங்காளதேசத்திற்கு அனுப்பப்படுவார்கள்" என்று பா.ஜ.க. தலைவர்கள் பயத்தை பரப்புவதே இதற்கு காரணம் என்று TMC செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்தார்.
 
ஆனால், பா.ஜ.க. இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, TMC "அரசியல் நாடகம்" ஆடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை உறுதி செய்ய 12 மாநிலங்களில் SIR நடைமுறைப்படுத்தப்பட்டாலும், மேற்கு வங்கத்தில் இது அரசியல் மோதலின் மையமாக மாறியுள்ளது.
 
Edited by Siva