தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் ஒரு நாள் ஆட்டோக்கள் ஓடாது.. போராட்டத்தை அறிவித்த சங்கம்..!
- மார்ச் மாதம் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. முன்னேற்பாடு செய்து கொள்ளுங்கள்..!
- வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!
- தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் - காலத்தின் கட்டாயம்!
- உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் வேலை நிறுத்தம் தொடரும்: மேற்குவங்க மாநில டாக்டர்கள் உறுதி..!
வேலைநிறுத்த போராட்டம்; 4 நாட்கள் முடங்கும் வங்கி சேவைகள்?
பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் வங்கிகள் 4 நாட்களுக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி 23ம் தேதி நள்ளிரவு முதல் 25ம் தேதி நள்ளிரவு வரை 48 மணி நேரத்திற்கு 8 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பொதுவாக மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். அந்த வகையில் 22ம் தேதி சனிக்கிழமை வங்கி விடுமுறை. அடுத்த நாளான ஞாயிற்றுக் கிழமையும் வங்கி விடுமுறை. தொடர்ந்து 2 நாட்கள் போராட்டத்தை கணக்கில் கொண்டால் வங்கிகள் 4 நாட்களுக்கு விடுமுறையில் இருக்கும். இதனால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். மாத கடைசி என்பதால் வங்கி சேவைகளை மக்கள் அதிகம் நாட வேண்டிய அவசியம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரூபம் ராய், நாங்கள் போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும், சிரமங்களை பொறுத்துக் கொண்டு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Edit by Prasanth.K
