1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Shah rukh should speak about jamia university issue

’கான்’களே வாயைத் திறந்து பேசுங்கள் – ரசிகர்கள் வற்புறுத்தல் !

ஜாமியா பல்கலைக்கழகம்
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக தாக்குதல் ஆகியவை குறித்து பாலிவுட் கான் நடிகர்கள் பேசவேண்டுமென ரசிகர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்துக்கு டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்க பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த போலிஸார் மற்றும் சீருடை அணியாத குழு ஒன்று அவர்கள் மேல் காட்டுமிராண்டித்தனமான தாக்கியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. எதிர்கக்ட்சிகள் ஆளும்கட்சியின் இந்த மோசமானப் போக்கை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களான அமீர்கான், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் இதுபற்றி ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்து வருகின்றனர். அதிலும் ஷாருக் கான் ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் மூவரும் இதுபற்றி பேசவேண்டும் எனக் குரல் எழுப்பியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
வருகிறதா புது சட்டம் ? –இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் இதெல்லாம் கிடையாது !