1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. SBI cancel sms charge to customers

எஸ்.எம்.எஸ் கட்டணம் இனி வசூலிக்கப்பட மாட்டாது: எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

state bank
ஒவ்வொரு வங்கியும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் கட்டணத்தை வசூல் செய்து வருகிறது என்பதும் ஒவ்வொரு வங்கியும் வசூல் செய்யும் கட்டணங்கள் வித்தியாசமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி தங்களுடைய பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது 
 
இதுவரை வசூலிக்கப்பட்ட எஸ்எம்எஸ் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளதை அடுத்து அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது, எஸ்பிஐ வங்கியை அடுத்து மற்ற வங்கிகளும் எஸ்எம்எஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்: ரூ.25 கோடி லாட்டரி பரிசு பெற்றவருக்கு அட்வைஸ்!