தொடர்புடைய செய்திகள்
- லாக்டவுனை நேசிக்கிறேன் - பிகினியில் ரசிகர்களை வசியம் செய்யும் ராதிகா ஆப்தே!
- பெரிய ஹீரோக்கள் எதுக்கு இருக்கீங்க...? கருணாஸை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!
- ஒழுங்கா இழப்பீடை செட்டில் பண்ணுங்க! – பாயும் ஜெர்மனி பதுங்கும் சீனா!
- சென்னையில் எந்த வயதினருக்கு எவ்வளவு பாதிப்பு...?
- கொரோனா வைரஸால் மருத்துவர் மரணம்: "உங்க கையால் குழி தோண்டி, யார் உடலையாவது புதைத்திருக்கிறீர்களா?"
சைனா பீஸ்ல... சொதப்பிய ரேபிட் கிட்: அடுத்து என்ன??
சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் கிட் தவறான முடிவுகளை முடிவுகளை காட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. ஆங்காங்கே நேற்றில் இருந்து சில தளர்வுகள் மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரேபிட் பரிசோதனை கருவிகள் கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியா வந்தது.
இந்த கருவிகள் மாநில வாரியாக பிரித்து கொடுக்கப்பட்டு கொரோனா சோதனையின் போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேபிட் கருவிகளின் முடிவுகள் மாறுபட்டதாக இருப்பதாக ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
எனவே, இந்தியா முழுவதும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட் பரிசோதனைகளை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
