1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (12:41 IST)

ஒழுங்கா இழப்பீடை செட்டில் பண்ணுங்க! – பாயும் ஜெர்மனி பதுங்கும் சீனா!

கொரோனாவால் பாதிக்கப்பட சீனாவே காரணம் என குற்றம் சாட்டி இழப்பீடு கேட்டுள்ளது ஜெர்மனி.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலிக் கொண்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலுக்கு குறிப்பிட்ட நாட்டினை குற்றவாளியாக கருத முடியாது என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சீனாவினால் ஜெர்மனி பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 149 பில்லியன் யூரோக்களை இழப்பீடாக கேட்டுள்ளது ஜெர்மனி. இதுகுறித்து ஜெர்மனி வெளியிட்டுள்ள பட்டியலில் சுற்றுலா இழப்புக்காக 50 பில்லியன் யூரோக்களும், திரைப்படத்துறை இழப்புக்காக 7.2 பில்லியன் யூரோக்களும், விமான சேவைகள் தொடர்பான இழப்புக்கு 1 பில்லியன் யூரோக்களும், தொழில்ரீதியான இழப்புகளுக்கு 50 பில்லியன் யூரோக்களும் என ஒரு பெரும் பட்டியலையே அளித்துள்ளது.

ஜெர்மனியின் இந்த செயலுக்கு பதிலளித்துள்ள சீனா உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தொற்றுநொய்க்கு ஒரு குறிப்பிட்ட நாட்டை குற்றம் சொல்ல முடியாது எனவும், சீனா மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் ஜெர்மனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது.