1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajasthan pillar collapse man injured

ஜாலியாக சென்ற நண்பர்கள்; திடீரென இடிந்து விழுந்த தூண்! – ராஜஸ்தானில் சோக சம்பவம்!

National
ராஜஸ்தானில் பாலம் கட்டுவதற்காக எழுப்பப்பட்ட தூணின் கட்டுமான விழுந்து பாதசாரி காயம் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பாரத்பூர் பகுதியில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பாரத்பூர் மார்க்கெட் பகுதி அருகே தூண்கள் எழுப்பும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அவ்வழியாக நண்பர்கள் இருவர் தோள்மேல் கை போட்டுக் கொண்டு சாவகாசமாக சென்றுள்ளனர்.

அப்போது திடீரென தூண் கட்டுமானத்திலிருந்து ஒரு தொகுப்பு இடிந்து விழுந்தது. அது கீழே சென்று கொண்டிருந்த நண்பர்கள் மீது விழுந்தது. ஒருவர் கையில் காயங்களுடன் தப்பிவிட மற்றொருஅர் தலை, கை, கால்களில் பலமாக அடிப்பட்டதால் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
விவசாயிகள் போராட்டம்: மதகுரு மரணம்; கெஜ்ரிவால் ஆதங்கம்!!