தொடர்புடைய செய்திகள்
- பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
- உலகக் கோப்பை அவமதிப்பு : மிட்செல் மார்ஷல் மீது போலீஸார் வழக்குப் பதிவு
- திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை!
- திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி; 4.23 லட்சம் இலவச டிக்கெட்டுகள் வழங்க திட்டம்!
- டிரஸ்ஸிங் ரூமிற்கே சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
திருப்பதி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து..!
நாளை திருப்பதி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய இருக்கும் நிலையில் நாளைய தினத்தின் விஐபி டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளை திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அவருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து திருப்பதி முழுவதும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை காலை தரிசனம் செய்ய இருப்பதால் அனைத்து விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பிற வகை தரிசனமும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளன.
ஐந்து மாநில தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த தேர்தலில் வெற்றி பெறவும், விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவும் அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேண்டிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
Edited by Siva
