1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (17:10 IST)

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை!

tirupati
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆந்திரமா நிலத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றன.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், வைஷ்ணவ பிராமணர்கள் மட்டும் ஆகம விதிப்படி  நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரசாதம் தயாரிப்பில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிகவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.