தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோப்பையில் இந்தியா தோற்க நேரு-காந்தி குடும்பமே காரணம்: அசாம் முதல்வர்
- சீனாவில் பரவும் நிமோனியா? இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
- டெல்லியில் நிரந்தரமாக மூடப்பட்டது ஆப்கானிஸ்தான் தூதரகம்: என்ன காரணம்?
- இழுத்துக் கொண்டே செல்லும் கேம்சேஞ்சர் ஷூட்டிங்… ஷங்கர் மேல் அதிருப்தியில் ராம்சரண்!
- கடைசி பந்தில் சிக்சர்.. ஆனால் ஸ்கோரில் கணக்கிடப்படவில்லை.. என்ன காரணம்?
உலகக் கோப்பை அவமதிப்பு : மிட்செல் மார்ஷல் மீது போலீஸார் வழக்குப் பதிவு
ஐசிசி உலக கோப்பையை ஆஸ்திரேலிய வீரர் தனது காலின் கீழ் வைத்து எடுத்த போட்டோ வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மிட்செல் மார்ஷல் மீது உத்தரபிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதில், ஆஸ்திரேலிய அணி மிக திறமையாக விளையாடியதுடன், லீக் சுற்றுகள் முதல் அரையிறுதி வரை தோற்காத இந்தியாவை வீழ்த்தி முறையாக உலக கோப்பையை தட்டி சென்றது.
இந்நிலையில் வென்ற ஐசிசி உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த உலக கோப்பையை பலவிதங்களில் போட்டோ எடுத்தனர். அதில் ஒன்றுமேல் கால் மேல் கால் போட்டு ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் போட்டோ எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனங்களையும் விமர்சங்களையும் எழுந்தன.
இந்த நிலையில், பிரதமர் மோடி வழங்கிய உலகக் கோப்பையை அவமதிக்கும் வகையில் மிட்செல் மார்ஷல் பதிவிட்ட புகைப்படம் 140கோடி இந்தியர்களையும் காயப்படுத்தியதாக அமைந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வழங்கிய உலகக் கோப்பையை அவமதிக்கும் வகையில் மிட்செல் மார்ஷல் பதிவிட்ட புகைப்படம் 140கோடி இந்தியர்களையும் காயப்படுத்தியதாக அமைந்தது.
இந்த நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என உத்தரபிரதேச மாநிலம் அலிகர் காவல் நிலையத்தில் பண்டித் கேஷவ் என்ற சமூக செயற்பாட்டாளர் புகார் மனு அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்