1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Parliament winter session adjourned

நாடாளுமன்றத்தில் அமளி... இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

Parliament
நாடாளுமன்றத்தில் அமளி நீடித்து வருவதால் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு அவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது என்பதும் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்கட்சிகள் அமளி செய்து வருவதால் நாடாளுமன்ற வளாகம் பெரும் பரபரப்பில் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே சஸ்பென்ட் ரத்து செய்யப்படும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் அமளி நீடித்து வருவதால் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு அவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஒரே விடுதியை சேர்ந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா! – நீலகிரியில் அதிர்ச்சி!