ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (16:50 IST)

பான் - ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

பான் - ஆதார் எண் இணைப்புக்கு வரும்  செப்டம்பர் 30  ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக  இம்மாதம் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.

இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அறிவித்துள்ளது.   மேலும் இந்த தேதிக்குள் ஆதார் எண்ணை பான் காருடன் இணைக்காவிட்டால் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என எச்சரித்துள்ளது.