1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (20:44 IST)

மோடி ஆட்சிக்கு வந்தால் ரயில் டிக்கெட் கன்பர்ம் .. வெயிட்டிங் லிஸ்ட்டே கிடையாது: ரயில்வே அமைச்சர்

Train
வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆகிவிட்டால் ரயில்வே பயணிகள் அனைவருக்கும் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகும் என்றும் வெயிட்டிங் லிஸ்ட் இருக்காது என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் டிக்கெட் கிடைக்காவிட்டால் வெயிட்டிங் லிஸ்ட் என்ற நிலை ஏற்படும் என்றும் அதுவும் கிடைக்காமல் பல ரயில் பயணத்தை கேன்சல் செய்து விடுவதும் உண்டு

இந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயில் பயணம் செய்ய விரும்பும் ஒவ்வொரு பயணிக்கும் டிக்கெட் உறுதி செய்யப்படும் என்று மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி பல மாற்றங்களை செய்து உள்ளார் என்றும் அடுத்ததாக ரயில்வேயில் புதிய மாற்றம் வரவிருக்கிறது என்றும் எந்த பயணி எங்கு பயணம் செய்ய வேண்டும் என்றாலும் அவர்களுக்கு டிக்கெட் கன்பர்ம் செய்யப்படும் என்றும் வெயிட்டிங் லிஸ்ட் என்ற சூழலை இனி இருக்காது என்றும் தெரிவித்தார். அவரது இந்த வாக்குறுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran