தொடர்புடைய செய்திகள்
- நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை!
- நீட் தேர்வு எழுதும் 68 வயது முதியவர் ....
- நாளை நீட் நுழைவுத் தேர்வு; இன்று மாணவி தற்கொலை! – அரியலூரில் அதிர்ச்சி!
- பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் கைவிடப்பட்டதா? அமைச்சர் அன்பில்மகேஷ் தகவல்
- கம்மல், செயின், காப்பு அணிய மாணவர்களுக்கு தடை: முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் நீட் தேர்வு நிறைவு: எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து!
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது
தமிழக அரசு மட்டுமே இந்த தேர்வை எதிர்த்து வந்தாலும் தமிழக மாணவ மாணவிகளும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாடு முழுவதும் நடைபெற்ற நீட்தேர்வு சற்றுமுன் நிறைவடைந்தது. தமிழ் இந்தி உள்பட 13 மொழிகளில் நடந்த இந்த தேர்வை 10.72 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்
நாடு முழுவதும் 497 நகரங்களில் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவ மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
அடுத்த கட்டுரையில்
