1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:23 IST)

ரூ.25 கோடி பேரம்? மறுப்பு தெரிவித்த அதிகாரிகள்!

ஷாரூக் மகனை வழக்கில் இருந்து விடுவிக்க 25 கோடி கேட்டதாக வந்த தகவல் உண்மையல்ல என மும்பை போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மறுப்பு. 

 
பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரை ஜாமீனில் விட விடாமல் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.  
 
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிப்பதற்கு போதைப்பொருள் அதிகாரிகள் ரூ.25 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இறுதியில் ரூ.18 கோடிக்கு பேரம் முடிந்ததாகவும் கூறப்பட்டது. 
 
இதனிடையே ஷாரூக் மகனை வழக்கில் இருந்து விடுவிக்க 25 கோடி கேட்டதாக வந்த தகவல் உண்மையல்ல என மும்பை போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளனர்.