தொடர்புடைய செய்திகள்
- மோடியை விமர்சித்த பிரபல பாஜக தலைவர்
- மம்தா பானர்ஜியின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி: மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பு
- பத்மாவதி' படத்திற்கு தடையில்லை: மேற்குவங்க முதல்வர் அறிவிப்பு
- மம்தா பானர்ஜி சந்திப்பில் நடந்தது என்ன? கொல்கத்தாவில் கமல் பேட்டி
- சிவசேனா தலைவருடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக மெகா அணியா?
அதிருப்தி பாஜக தலைவர்களுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: திட்டம் என்ன?
பாஜகவுக்கு எதிரான கட்சி தலைவர்களை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பாஜகவில் உள்ள அதிருப்தி தலைவர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பாஜக அதிருப்தி தலைவர்களை இன்று மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோர் கட்சியில் இருந்து விலகி தனி அணி அமைத்து மம்தா பானர்ஜி தலைமையிலான மூன்றாவது அணிக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகள், தலைவர்களை ஒரே அணியில் இணைப்பதில் கடந்த சில மாதங்களாக மம்தா பானர்ஜி மற்றும் சந்திரசேகரராவ் ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாவது அணியை வலுப்படுத்த இன்னும் பல்வேறு கட்சி தலைவர்களுடன் மம்தா பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
