1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Maharashtra Considers Increasing Working Hours to 10 Hours

வேலை நேரம் 10 மணி நேரமாக மாற்றப்படுகிறதா? அரசு பரிசீலை.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

Maharashtra
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் வேலை நேரத்தை ஒன்பது மணி நேரத்திலிருந்து பத்து மணி நேரமாக உயர்த்த மாநில அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவல்கள், ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 
 
தினசரி வேலை நேரம் அதிகரிப்பது மட்டுமின்றி, அவசர வேலைகளுக்கு ஒரு நாளுக்கான அதிகபட்ச வேலை நேரம் 12 மணி நேரமாக இருப்பதை நீக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம், ஊழியர்களின் பணி சுமையை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நடவடிக்கை, தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வேலை நேரம் அதிகரிப்பு, ஊழியர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அதிக பணிச்சுமை உள்ள நிலையில், கூடுதல் வேலை நேரம் அவர்களுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்.
 
அதே சமயம், இந்த திட்டத்தை தனியார் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம், உற்பத்தி திறனைப் பெருக்கி, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். மகாராஷ்டிராவை ஒரு முதலீட்டு மையமாக மாற்றுவதற்கும், தொழில்துறை வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்த முடிவை அரசு எடுப்பதற்கு முன், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும், குறிப்பாக ஊழியர்களின் கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
மீண்டும் தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனம்.. 3 பேர் பரிதாப பலி..!