வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (20:58 IST)

கேரளாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.47% தேர்ச்சி

கேரளாவின் முதன்முதலாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி 99 சதவிகித தாண்டியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
கேரளாவில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் விகிதம் 99.47 சதவீதமாக உள்ளது. கண்ணூர் மாவட்டம் தான் மாநிலத்திலேயே மிக அதிகமாக 98.33 சதவீதம் தேர்ச்சி பெற்று முதன்மை மாவட்டமாக திகழ்கிறது
 
அதேபோல் 97.1 சதவீத தேர்ச்சி பெற்ற நாடு குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக வயநாடு மாவட்டம் உள்ளது. அதே போன்று வளைகுடா பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் 97.30% ஆக உள்ளது. இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்