1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kerala sslc result today

இன்று வெளியாகிறது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு: கேரள அரசு அறிவிப்பு!

எஸ்.எஸ்.எல்.சி
கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று வெளியாக இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கேரளாவில் கொரோனா பரவல் இடையேயும் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ’கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது என்றும் இந்த முடிவை இணையதளங்களில் மாணவ மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார் 
 
மேலும் இந்த தேர்வை 4.12 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
3ஆம் அலைக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டது: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்