1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. If you go outside, what would you do?

வெளியில போனால் கொரோனா..வீட்டுக்குள்ள பாம்பு...என்ன பண்ணறது ?

CoronaVirus
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் வசித்து வருபவர் சிங் குஷ்வா. இவர் தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார்.

ஆனால், இவரது வீட்டில் இருந்து சில நாட்களாக பாம்புக் குட்டிகள் வெளிவருகின்றன. இதைப்பார்த்து அக்கம் பக்கத்து வீட்டார் பயந்தனர். சில பாம்புகளை வெளியேற்றியதும் வேறு பகுதிகளில் இருந்து பாம்புகள் வெளிவரத் தொடங்கின.

இந்நிலையில், கொரோனா வைரஸால் வீட்டை வெளியே வர முடியாததால், சிங் குஷ்வா , என் வீட்டுக்குள் பாம்புக்குட்டிகளும், வீட்டுக்கு வெளியே கொரோனா வைரஸும் உள்ளது நான் எங்கு செல்வது எனக் கேட்டு சரியான தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்.
அடுத்த கட்டுரையில்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்!