வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (16:07 IST)

தூங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கடந்தாண்டு போலவே இந்தாண்டும் சுமார் 9 மணி நேரம் தூங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசளிப்பதாக வேக் பிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனித வாழ்க்கையில்தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.ஆனால் இன்றைய இணையதள உலகில் மனிதர்கள் பணம், வசதியான வாழ்க்கை என ஓடி தினமும் நிம்மதி இன்றி அலைந்து வருகிறார்கள்.

அதனால் நிம்மதியான தூக்கம் என்பது இப்போது கனவாகிவிட்டது. இந்நிலையில், பெங்களூரைச்சேர்ந்த வேக்பிட் நிறுவனம் கடந்தாண்டு போலவே இந்தாண்டு தூங்கும் போட்டியை அறிவித்துள்ளது.

அதன்படி, sleep internship ஐ மக்களின் தூக்க முறையை ஆய்வு செய்வதற்காக அறிவித்துள்ளது வேக் பிட். செல்போன் போன்ற எந்தக் கருவிகளையும் பயன்படுத்தாமல்  100 நாட்கள் தினமும் 9 மணிநேரம் தூங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.