1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Hindu priest controversial speech

இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற வேண்டும்! – சாமியார் சர்ச்சை பேச்சு!

Satyadev anand
இந்தியாவை காப்பாற்ற இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என சாமியார் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக சாமியார்கள் சிலர் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சாமியார் எதி சத்யதேவானந்த் ”இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க இந்துக்கள் ஏராளமான குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தியா இந்து பூமியாக இருக்கும்” என பேசியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளிக்கக் கோரி சத்யதேவானந்துக்கு இமாச்சல பிரதேச போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
வேலை இல்லா விரக்தியில் கணவன் தற்கொலை! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!