1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Gulab Cyclone to be formed within 12 hours

வங்கக்கடலில் 'குலாப்' புயல்

IMD
வங்கக்கடலில்  அடுத்த 12 மணி நேரத்தில் குலாப் புயலாக உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கிறது. 
 
காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் தெற்கு ஓடிசா - வடக்கு ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
வேட்புமனுவை திரும்பப் பெற இன்றுதான் கடைசி நாள்!