1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (18:14 IST)

நாளை முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்கிறதா?

நாளை முதல் சிலிண்டர் கேஸ் விலை உயர வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி மாற்றப்பட்டு வருகிறது என்பதும் கடந்த மாதம் 1ஆம் தேதியும் உயர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை நவம்பர் 1ஆம் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக நாளை சிலிண்டர் விலை குறைந்தது 25 ரூபாய் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து இருக்கும் பொது மக்கள் சமையல் கேஸ் விலை உயர்ந்தால் காட்டும் சிக்கலுக்குள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது