செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (20:04 IST)

நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்!

நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்!
நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி சேவைக்கான ஏலம் நடைபெற்றது என்பதும் இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ உள்பட 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்தது என்பதும் தெரிந்தது
 
இந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்  நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதிவேக இன்டர்நெட் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கயிருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.