1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. From today ias ips main exam starts

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு : இன்று தொடக்கம்..!

upsc
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் போன்ற உயர்நிலை பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று ஆரம்பமாகிறது.

ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூன்று கட்டங்களில் நடைபெறுகிறது: முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு.

இந்த ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் பணிகளில் 1,056 காலி இடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு முடிவடைந்த நிலையில், மெயின் தேர்வுக்கு 14,627 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், இதில் 650 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மெயின் தேர்வு செப்டம்பர் 20 முதல் 29-ம் தேதி வரை நாட்டில் உள்ள 24 மையங்களில் நடைபெறவுள்ளது, இது சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நடைபெறும்.

சென்னையில், எழும்பூர், கோடம்பாக்கம், பெரம்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று தொடங்கிய மெயின் தேர்வில், காலை 9 மணி முதல் 12 மணி வரை கட்டுரைத் தேர்வு நடைபெறுகிறது. அடுத்தடுத்து, செப்டம்பர் 21 முதல் 29 வரை பொது அறிவு மற்றும் விருப்பத்தேர்வுகள் நடைபெறுகின்றன.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தீர்மானங்களை நிறைவேற்றாவிட்டால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்; சென்னை பல்கலை ஆசிரியர்கள்