1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (10:40 IST)

குஜராத்தில் தலித் பிரிமீயர் லீக்… புதுவிதமான முயற்சி!

குஜராத்தில் தலித் இளைஞர்கள் மட்டும் பங்கேற்கும் தலித் ப்ரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்குக் குஜராத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் தலித் இளைஞர்கள் மட்டும் பங்கேற்கும் விதமாக தலித் பிரிமீயர் லீக் என்ற கிரிக்கெட் தொடர் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. டென்னிஸ் பந்து  தொடரான இந்த தொடர் மார்ச் 6ம் தேதி பாலான்பூரில் தொடங்கி ஏப்ரல் முதல்வாரத்தில் முடிவடைய உள்ளது. அந்த பகுதியில் பலதரப்பட்ட சாதிப்பிரிவினரும் இதுபோல கிரிக்கெட் தொடரை தங்கள் சாதிக்குள்ளாகவே நடத்தி வந்த நிலையில் அதில் தலித் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காகததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தொடர் நடத்துனர்கள் தெரிவித்துள்ளனர்.