தொடர்புடைய செய்திகள்
- குஷ்புவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ரசிகர்… குஷ்பு சொன்ன பதில்!
- சிம்புவின் தாயார் வெளிநடப்பு… பேச்சுவார்த்தையில் முடிவின்மை!
- இந்தியாவில் அக்டோபரில் உச்சமடையும் மூன்றாவது அலை!? – பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை!
- நேரடியாக படத்தயாரிப்பில் இறங்கும் ஜெயா டிவி… இயக்குனர் இவர்தான்!
- ரக்ஷா பந்தனை முன்னிட்டு வெளியான வேதாளம் தெலுங்கு ரீமேக் டீசர்!
25 ஆயிரமாக உள்ள தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,24,49,306 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 389 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,34,756 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,16,80,626 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,33,924 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
