1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (10:34 IST)

இந்த ஆண்டின் மிக அதிகமான கொரோனா பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று இந்த ஆண்டிலேயே முதன்முறையாக அதிகபடியான பாதிப்பு பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,291 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,13,85,339 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,58,725 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,10,07,352 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,19,262 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.