தொடர்புடைய செய்திகள்
- அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திருட்டு! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!
- குழந்தைகள் பத்திரம்... கொரோனா 2 ஆம் அலையில் சிக்கும் பரிதாபம்!
- ஏழைநாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி! – முன்வந்த நியூஸிலாந்து!
- கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கப்படும்… கொரோனா இரண்டாவது அலை எதிரொலி!
- தடுப்பூசி திருவிழா - சுமார் 31.39 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டது!
14 நாட்களில் இத்தனை லட்சம் பேருக்கு கொரோனாவா??
கடந்த 14 நாட்களில் மட்டும் 18 லட்சத்து 52 ஆயிரத்து 899 பேருக்கு நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் இந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக உள்ளது. கடந்த 14 நாட்களில் மட்டும் 18 லட்சத்து 52 ஆயிரத்து 899 பேருக்கு நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது.
அடுத்த கட்டுரையில்
