1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (19:13 IST)

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று: கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதையடுத்து கேரளாவில் திங்கட்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்  என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்