வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 29 ஜூலை 2017 (13:46 IST)

சசிகலா ஸ்டைலில் சோனியா: அடுத்த கூவத்தூராய் மாறிய பெங்களூர்; எம்எல்ஏ-கள் சிறைபிடிப்பு!!

காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏ-களை இரவோடு இரவாக  பெங்களூருக்கு அழைத்து, அங்கு அவர் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.




 
 
குஜராத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு மாறியுள்ளனர். இதனால், காங்கிரசின் பலம் குறைந்துள்ளது. 
 
குஜராத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பாக அமித்ஷா மற்றும் ஸ்மிருதி ராணி போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் களமிறங்குகிறார். 
 
காங்கிரஸ் வெற்றி பெற 44 எம்எல்ஏ-களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏற்கனவே சில எம்எல்ஏ-கள் பாஜக பக்கம் சாய்ந்ததால், மீதி இருக்கும் எம்எல்ஏ-களை இரவோடு இரவாக சிறைபிடித்து வைத்துள்ளது காங்கிரஸ் தலைமை.
 
இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சசிகலா தனது பலத்தை காட்ட கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை பிடித்ததை நினைவு படுத்துகிறது.