தொடர்புடைய செய்திகள்
- விபத்தில் துண்டான வாலிபரின் கையை கவ்விச் சென்ற நாய்
- ஓடும் ரயிலிலிருந்து விழுந்த நபர்; காப்பாற்றிய போலீஸ்! – வைரலாகும் வீடியோ!
- நேபாள விமான விபத்து: கிடைத்தது கருப்பு பெட்டி!
- ஓடும் ரயில் சாகசம் செய்த மாணவர் பலி....பரவலாகும் வீடியோ
- சென்னை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்
கட்டுப்பாடிழந்து பள்ளத்தில் பாய்ந்த பேருந்து..! – சோகத்தில் முடிந்த பக்தி யாத்திரை!
உத்தரகாண்டில் சர்தாம் புனித யாத்திரை சென்ற பயணிகள் பேருந்து கவிழ்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டின் உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோவிலுக்கு நேற்று மாலை பக்தர்கள் பலர் பேருந்து ஒன்றில் சர்தாம் புனித யாத்திரை சென்றனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேரில் 22 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
