1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (11:35 IST)

தடை செய்யப்பட்ட பட்டாசு விற்பனை: டெல்லியில் பட்டாசு வியாபாரி கைது!

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்த நிலையில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ததாக டெல்லியில் பட்டாசு வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், பட்டாசு கடைகளில் அதிரடி சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள நங்கோலி போலீஸ் அதிகாரிகள் இன்று டெல்லியில் சோதனை செய்தபோது பட்டாசு கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ததாக பட்டாசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 80 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மேலும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது