1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (15:43 IST)

ஒரே அடி 15 கிலோ மீட்டருக்கு சவுண்டு... ராமர் கோவில் மணி ஸ்பெசாலிட்டி!

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலில் பொருத்தப்படவுள்ள மணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கவுள்ளது. இந்த கோவிலுக்கு உத்தர பிரதேச மாநிலம் ஜலேசர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்களான தவு தயால் மற்றும் இக்பால் மிஸ்த்ரி கோவிக்கு மணி உருவாக்கியுள்ளனர். 
 
இந்நிலையில் இது குறித்து இக்பால் மிஸ்த்ரி தெரிவித்துள்ளதாவது, இது சிறந்த முறையில் உருவாகியுள்ளது.  மேலும், இந்த மணியின் ஒலி 15 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்கக்கூடியது. 
 
இது தனித்தனியான பாகங்களைக் கொண்டு பொருத்தப்படவில்லை. மொத்தமாக உலோகக் கலவையால் ஒரே பொருளாக உருவாக்கப்பட்டது. தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.