1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2022 (19:32 IST)

அமைச்சர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வன்முறை: ஆந்திராவில் பரபரப்பு!

அமைச்சர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வன்முறை: ஆந்திராவில் பரபரப்பு!
அமைச்சர் பதவி கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
ஆந்திர மாநிலத்தில் இன்று அமைச்சரவை மாற்றப்பட்டது என்பதும் ஏற்கனவே இருந்த 25 அமைச்சர்களில் 11 பேருக்கு மட்டுமே பதவி கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் புதிதாக அமைச்சர்கள் பதவியேற்றவர்களுக்கான பொறுப்புகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் திடீரென சாலையில் இறங்கி வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைக்கிறது 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள பல சாலைகளில் வாகனங்கள் தீ வைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்