1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2017 (18:49 IST)

ஆந்திர சட்டசபையை என்ன செய்ய போகிறார் ராஜமெளலி? பிரம்மிக்க வைக்கும் மாதிரி வீடியோ!!

2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்தது. அப்போதில் இருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலத்திற்கும் ஹைதராபாத் தலைநகராக செயல்பட்டு வருகிறது.
 
தற்போது அமராவதி ஆந்திராவின் தலைநகராக மாற இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக போகும் அமராவதி நகரத்தை பாகுபலி இயக்குனர் ராஜமௌலி வடிவமைக்கிறார். 
 
அமராவதியை உருவாக்க மொத்தமாக ரூ.58,000 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா மாநில சட்டசபையில் புதிய மாற்றத்தை கொண்டுவரவுள்ளார். இது குறித்த மாதிரி வீடியோவை சமீபத்தில் ஆந்திர அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.
 
இந்த வீடியோவில் ராஜமெளலின் கட்டமைப்பு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....