தொடர்புடைய செய்திகள்
- நிலவில் நில அதிர்வு ஏற்பட்டதா? விக்ரம் லேண்டர் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல்..!
- நிலவில் நிலநடுக்கத்தை கண்டறிந்த விக்ரம் லேண்டரின் ILSA
- ஆதித்யா எல் 1’ பயண காலம் எத்தனை நாட்கள்? என்னென்ன சிறப்பு அம்சங்கள்?
- நிலவில் பிளாஸ்மாவை கண்டறிந்த விக்ரம் லேண்டர்
- வரும் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? ரஜினியின் அண்ணன் பதில்
‘ஆதித்யா எல் 1' கவுண்டவுன் தொடங்கியது...
இஸ்ரோ நிறுவனத்தின் ஆதித்யா எல் 1' விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கியது.
விண்வெளியில் இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல புதிய ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறது, சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தன.
இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 57 என்ற ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான 24 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்கியது.
அதன்படி நாளைய தினம் காலை 11.50க்கு ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.
அடுத்த கட்டுரையில்
