1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (22:32 IST)

விசாரணைக்கு ஆஜராகுபவர்களிடம் இருந்து பணம் பெற்ற நீதிபதியின் உதவியாளர்!

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஒரு நீதிபதிக்கு உதவியாளராக இருப்பவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுபவர்களிடம் இருந்து பணம் பெற்ற நிலையில், அவர பணியிடை நீக்கம் செய்து  நீதிபத்  உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் மூத்த  நீதிபதி ஒருவருக்கு உதவியாளராக இருப்பவர்,  நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்கு விசாரணைக்கு வருபவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்று வந்துள்ளார்.

சமீபத்தில், தன் இடுப்பில் கியூஆர் கோடை இடுப்பில் வைத்து    பேடிஎம் மூலம் பணம் கேட்டு வந்துள்ளார்.  இதுகுறித்து நீதிபதிக்கு தெரியவந்ததை அடுத்து மூத்த நீதிபதி அவரை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அம்மா நிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.