வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (22:07 IST)

நிச்சயத்தின்போது முத்தமிட்ட மணமகன்...திருமணத்தை நிறுத்திய மணமகள்!

முத்தம் கொடுத்து தகாத முறையில்  நடந்து கொண்டதால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பால் என்ற பகுதியில், கடந்த  மாதம் 27 ஆம் தேதி  இரவில், விவேக் அக்னிஹோத்ரி(26), மற்றும் இளம்பெண்ணுக்கும் இடையே திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் 300க்கும் அதிகமான விருந்தினர்கள் குவிந்தனர்.

அப்போது, விவேக், மணமகளின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் மணமகனின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி திருமணத்தை ரத்து செய்தார்.

இதுகுறித்து போலீஸார் இரு தரப்பிலும் பேசி சமாதானம் செய்ததுவைக்க முயற்செய் செய்தும் பயனில்லை.

எனவே, மணமகளின் முடிவு, மாப்பிள்ளை வீட்டாருக்கு அத்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj